காரைக்கால் மீன்பிடி துறைமுகம் ரூ.136.17 கோடியில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம்-நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
SSnews Digital- Tamil News | Online Tamil News | Tamil News Live | Pondicherry News | Breaking News Headlines, Latest Pondicherry News, India News, World News – SSsnews Digital
காரைக்கால் மீன்பிடி துறைமுகம் இன்று 136.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விரிவாக்க பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த துறைமுகம், காரைக்காலில் உள்ள 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு முக்கிய பயன்பாடாக உள்ளது. மீனவர்கள் தொடர்ந்து துறைமுகத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த கோரிக்கை விடுத்தனர்.
விரிவாக்க பணியில், மீன் பதப்படுத்தும் நிலையம், படகுகள் மூலம் சரக்கு வாகனங்களுக்கு மீன்களை அதிநவீன இயந்திரங்கள் மூலம் இறக்குமதி செய்யும் வசதி, அதிநவீன படகு கட்டுமான இடங்கள் உள்ளிட்ட பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நாட்டின் தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாகன், அமைச்சர்கள் லெட்சுமி நாராயணன், திருமுருகன், தேனி ஜெயக்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விரிவாக்கத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.